பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஜெய்பீம் படத்தை அடுத்து தற்போது ரஜினி நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி இருக்கிறார் ஞானவேல். அக்டோபர் 10ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில், நேற்று இப்படத்தின் மனசிலாயோ என்ற முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ஜெய்பீம் படத்தைப் போலவே வேட்டையன் படத்தையும் உண்மை கதை அடிப்படையில் இயக்கி உள்ள ஞானவேல், இப்படம் தமிழகத்தில் நடந்த சில என்கவுண்டர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருப்பதாக கூறுகிறார்.
இப்படத்திற்கு பிறகு மறைந்த சரவண பவன் ராஜகோபால் மற்றும் ஜீவ ஜோதி இடையே நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் தனது அடுத்த படத்தை இயக்க போகிறாராம். குறிப்பாக, அவர்களுக்கிடையே நடந்த பிரச்னை மற்றும் ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கப் போகிறாராம் ஞானவேல். ஹிந்தியில் உருவாகும் இந்த படத்திற்கு தோசா கிங் என்று அவர் தலைப்பு வைத்திருக்கிறார் .