சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஜெய்பீம் படத்தை அடுத்து தற்போது ரஜினி நடிப்பில் வேட்டையன் படத்தை இயக்கி இருக்கிறார் ஞானவேல். அக்டோபர் 10ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில், நேற்று இப்படத்தின் மனசிலாயோ என்ற முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ஜெய்பீம் படத்தைப் போலவே வேட்டையன் படத்தையும் உண்மை கதை அடிப்படையில் இயக்கி உள்ள ஞானவேல், இப்படம் தமிழகத்தில் நடந்த சில என்கவுண்டர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருப்பதாக கூறுகிறார்.
இப்படத்திற்கு பிறகு மறைந்த சரவண பவன் ராஜகோபால் மற்றும் ஜீவ ஜோதி இடையே நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் தனது அடுத்த படத்தை இயக்க போகிறாராம். குறிப்பாக, அவர்களுக்கிடையே நடந்த பிரச்னை மற்றும் ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கப் போகிறாராம் ஞானவேல். ஹிந்தியில் உருவாகும் இந்த படத்திற்கு தோசா கிங் என்று அவர் தலைப்பு வைத்திருக்கிறார் .