ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில் அதனை இயக்குனர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுத்துள்ளனர்.
மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு திரைப்பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. சில தினங்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி வெளிநாட்டில் வைத்து நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதற்கு உடனடியாக விளக்கம் அளித்த நிவின் பாலி, அந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு, அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை இயக்குனர்களான வினித் சீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுத்துள்ளனர். அந்த பெண் குற்றம் சாட்டப்பட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டிச., 14 முதல் 15ம் தேதி காலை வரை கொச்சியில் வினித் சீனிவாசனின் படப்பிடிப்பில் இருந்தார் என்றும் பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.




