ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
மதுரை : தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் கோட் படத்தை மதுரை உட்பட ஆறு மாவட்டங்களில் செப்., 5ல் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலை 9:00 மணி காட்சிக்கு, 700 ரூபாய் கட்டணம் வசூலித்து தர வேண்டும் என வினியோகஸ்தரான ராகுல் வற்புறுத்துவதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் உரிமையாளர் ராகுல் பெற்றுள்ளார்.
அரசு விதிப்படி காலை 9:00 மணிக்கு படம் திரையிடப்பட உள்ளது. இதற்கான கட்டணம் 190 ரூபாய். இதை மால்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் வசூலிக்கலாம். தனி தியேட்டர்களில் 700 ரூபாய் வசூலிக்க வேண்டும் என, ராகுல் தரப்பில் மதுரை உட்பட ஆறு மாவட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த உரிமையாளர்கள், செப்., 5ல் படத்தை திரையிடுவதா, வேண்டாமா என குழப்பத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: தியேட்டர்களின் 'சீட்' எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டு, 700 ரூபாய் கட்டணம் செலுத்தாவிட்டால் செப்., 5 காலை 9:00 மணி காட்சிக்கு 'கியூப்' ஆன் செய்ய மாட்டோம் என ராகுல் தரப்பில் மிரட்டுகின்றனர்.
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரசிகர்களின் எதிர்ப்புக்கும், அரசின் நடவடிக்கைக்கும் நாங்கள் ஆளாக வேண்டியிருக்கும். இந்த குழப்பத்தால் ஆன்லைன் புக்கிங் செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. அதே சமயம் மால் தியேட்டர்களில் 'புக்கிங்' முடிந்துவிட்டது.
பல தியேட்டர்கள் இன்று வணிக வளாகமாக, குடியிருப்புகளாக மாறிவிட்டன. மீதமுள்ள தியேட்டர்களை காலி செய்யும் நடவடிக்கையாகத் தான் இதை பார்க்கிறோம். ஏற்கனவே ஓ.டி.டி., பிளாட்பாரங்களில் படங்களை வெளியிடுவதால் பல தியேட்டர்கள் 'ஹவுஸ்புல்' ஆவதே கிடையாது.
'ஸ்டார்' அந்தஸ்து நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தான் ஓரளவுக்கு போட்ட முதலீட்டை கையை கடிக்காமல் சிறிது லாபத்துடன் எடுக்க முடிகிறது. அதற்கும் இப்படி 'செக்' வைத்தால் எப்படி? இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமா வினியோகஸ்தராக இருந்த அமைச்சர் உதயநிதிக்கு, எங்கள் பிரச்னைகள் தெரியும் என்பதால் அவர் இதில் உதவ வேண்டும்.
இவ்வாறு கூறினர்.