சின்னத்திரையில் பார்த்திபன் | பிளாஷ்பேக் : மம்முட்டி வேண்டாம் என ஒதுக்கிய டைட்டில் மோகன்லாலுக்கு கிரீடம் சூட்டியது | கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'பராரி'. இதில் ஹரி சங்கர், சங்கீதா நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். ராஜு முருகன் உதவியாளர் எழில் பெரியவெடி இயக்கி உள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் எழில் பெரியவெடி கூறும்போது : இந்த படத்தின் களமும், கதையும் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாதது. வட மாவட்டங்களில் இருந்து பராரியாக பெங்களூரு மாந்தோப்புக்கு வேலைக்கு செல்லும் மக்களை பற்றிய கதை. ஜாதி மோதல், தீண்டாமை பற்றி பேசும் படம். கர்நாடக மக்களும், தமிழ் மக்களும் சகோதரன் சகோதரி போன்று வாழ்கிறார்கள். ஆனால் இங்கும், அங்கும் சிலர் அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். படத்தின் 20 நிமிட கிளைமாக்ஸ் ஒவ்வொரு மனிதர்களையும் உலுக்கி விடும். ஜாதி, மதங்களை தாண்டிய மனிதம்தான் ஆகப்பெரிய சக்தி, என்பதை சொல்லும் படமாக உருவாகி உள்ளது. என்றார்.