‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரோஜா. பின்னர் ஆந்திர அரசியலில் நுழைந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் ரோஜா. அதன்பிறகு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தபோது விளையாட்டு துறை அமைச்சரானார். இந்த நிலைக்கு சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது. இதில் நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜாவும் தோல்வி அடைந்தார்.
இப்படியானநிலையில், விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் ரோஜா இணைய போவதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் சில தினங்களாகவே வைரலாகி வந்தது. இந்தநிலையில் நேற்று மீடியாக்களை சந்தித்த ரோஜா அந்த செய்தியை மறுத்துள்ளார்.
மேலும், நான் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நீடிக்கவே விரும்புகிறேன். நான் விஜய் கட்சியில் இணையப்போவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் வதந்தி பரப்பி விட்டு வருகிறார்கள். ஜெகன் மோகன் கட்சியில் முக்கிய இடத்தில் இருக்கும் நான் எதற்காக விஜய் கட்சியில் இணைய வேண்டும் . அதிலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோதே நான் அந்த கட்சியில் இணையவில்லை. அப்படி இருக்கும்போது எதற்காக விஜய் கட்சியில் நான் சேர வேண்டும். என்னைப்பொறுத்தவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருபோதும் வெளியேற மாட்டேன் என்று சொல்லி அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை ரோஜா.