'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரோஜா. பின்னர் ஆந்திர அரசியலில் நுழைந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் ரோஜா. அதன்பிறகு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தபோது விளையாட்டு துறை அமைச்சரானார். இந்த நிலைக்கு சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது. இதில் நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜாவும் தோல்வி அடைந்தார்.
இப்படியானநிலையில், விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் ரோஜா இணைய போவதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் சில தினங்களாகவே வைரலாகி வந்தது. இந்தநிலையில் நேற்று மீடியாக்களை சந்தித்த ரோஜா அந்த செய்தியை மறுத்துள்ளார்.
மேலும், நான் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நீடிக்கவே விரும்புகிறேன். நான் விஜய் கட்சியில் இணையப்போவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் வதந்தி பரப்பி விட்டு வருகிறார்கள். ஜெகன் மோகன் கட்சியில் முக்கிய இடத்தில் இருக்கும் நான் எதற்காக விஜய் கட்சியில் இணைய வேண்டும் . அதிலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோதே நான் அந்த கட்சியில் இணையவில்லை. அப்படி இருக்கும்போது எதற்காக விஜய் கட்சியில் நான் சேர வேண்டும். என்னைப்பொறுத்தவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருபோதும் வெளியேற மாட்டேன் என்று சொல்லி அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை ரோஜா.