நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரோஜா. பின்னர் ஆந்திர அரசியலில் நுழைந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் ரோஜா. அதன்பிறகு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தபோது விளையாட்டு துறை அமைச்சரானார். இந்த நிலைக்கு சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது. இதில் நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜாவும் தோல்வி அடைந்தார்.
இப்படியானநிலையில், விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் ரோஜா இணைய போவதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் சில தினங்களாகவே வைரலாகி வந்தது. இந்தநிலையில் நேற்று மீடியாக்களை சந்தித்த ரோஜா அந்த செய்தியை மறுத்துள்ளார்.
மேலும், நான் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நீடிக்கவே விரும்புகிறேன். நான் விஜய் கட்சியில் இணையப்போவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் வதந்தி பரப்பி விட்டு வருகிறார்கள். ஜெகன் மோகன் கட்சியில் முக்கிய இடத்தில் இருக்கும் நான் எதற்காக விஜய் கட்சியில் இணைய வேண்டும் . அதிலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோதே நான் அந்த கட்சியில் இணையவில்லை. அப்படி இருக்கும்போது எதற்காக விஜய் கட்சியில் நான் சேர வேண்டும். என்னைப்பொறுத்தவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருபோதும் வெளியேற மாட்டேன் என்று சொல்லி அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை ரோஜா.