'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது விஜயவாடாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர்கள் சத்யராஜ், ஷோபனா ஆகியோர் மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல கன்னட இயக்குனரும் நடிகருமான உபேந்திராவும் இந்த படத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார்.
இவர் கடந்த 2008ல் விஷால் நடிப்பில் வெளியான சத்யம் என்கிற ஒரே தமிழ் படத்தில் மட்டுமே இதற்கு முன்பு நடித்திருந்தார். கன்னடத்தில் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி அதில் முன்னணி ஹீரோக்கள் பலரும் நடிக்க தயங்கியபோது தானே கதாநாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் உபேந்திரா.
அப்படி அவர் 2010ல் நடித்து இயக்கிய சூப்பர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த சமயத்தில் இந்த படம் குறித்து ரஜினிகாந்த் பாராட்டி பேசியபோது, “இயக்குனர் உபேந்திரா வித்யாசமாக யோசிப்பது போல இந்தியாவில் வேறு ஒருவரும் யோசிக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தனது படத்திற்கு ஒரு புதிய வடிவத்தை கொண்டு வந்து விடுவார். ஒரு இயக்குனராக அவரை தான் ரொம்பவே ரசிக்கிறேன். அவர் படங்களில் நடித்துக் கொண்டு டைரக்ஷனையும் தொடர வேண்டும்” என்று பாராட்டினார்.
அப்போது உபேந்திரா நல்ல கதை வைத்திருந்தால் அதை என்னிடம் சொல்ல விரும்பினால் நிச்சயமாக இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். அவர் அப்போது உபேந்திராவுடன் இணைந்து பணியாற்ற விரும்பியது 14 வருடம் கழித்து இப்போது ஒரு நடிகராக தனது படத்தில் அவருடன் இணைந்ததன் மூலம் நிறைவேறியுள்ளது