அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நடிகர் வடிவேலு பீக்கில் இருந்த சமயத்தில் அவரது படங்களில் தொடர்ந்து குறிப்பிட்ட சில நகைச்சுவை நடிகர்கள் இடம் பிடித்து வந்தனர். அவர்களில் நடிகர் சிங்கமுத்துவும் ஒருவர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. ஆனால் அரசியல் நிலைப்பாடு காரணமாக சிங்கமுத்துவுக்கும் வடிவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல பேட்டிகளில் பொது மேடைகளில் சிங்கமுத்து வடிவேலு குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்து பேசி உள்ளார். சமீபத்திய அவரது பேட்டிகளிலும் கூட வடிவேலுவின் திரை வாழ்க்கை மற்றும் அவரது சொந்த வாழ்க்கை குறித்து விமர்சித்து பேசியிருந்தார் சிங்கமுத்து.
இதனைத் தொடர்ந்து வடிவேலு தரப்பிலிருந்து இப்படி சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை பொதுவெளியில் பேசி தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாகவும் பேசுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மான நஷ்ட ஈடாக தனக்கு சிங்கமுத்து 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பதில் அளிக்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.