கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
நடிகர் வடிவேலு பீக்கில் இருந்த சமயத்தில் அவரது படங்களில் தொடர்ந்து குறிப்பிட்ட சில நகைச்சுவை நடிகர்கள் இடம் பிடித்து வந்தனர். அவர்களில் நடிகர் சிங்கமுத்துவும் ஒருவர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. ஆனால் அரசியல் நிலைப்பாடு காரணமாக சிங்கமுத்துவுக்கும் வடிவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல பேட்டிகளில் பொது மேடைகளில் சிங்கமுத்து வடிவேலு குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்து பேசி உள்ளார். சமீபத்திய அவரது பேட்டிகளிலும் கூட வடிவேலுவின் திரை வாழ்க்கை மற்றும் அவரது சொந்த வாழ்க்கை குறித்து விமர்சித்து பேசியிருந்தார் சிங்கமுத்து.
இதனைத் தொடர்ந்து வடிவேலு தரப்பிலிருந்து இப்படி சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை பொதுவெளியில் பேசி தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாகவும் பேசுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மான நஷ்ட ஈடாக தனக்கு சிங்கமுத்து 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பதில் அளிக்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.