சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகர் வடிவேலு பீக்கில் இருந்த சமயத்தில் அவரது படங்களில் தொடர்ந்து குறிப்பிட்ட சில நகைச்சுவை நடிகர்கள் இடம் பிடித்து வந்தனர். அவர்களில் நடிகர் சிங்கமுத்துவும் ஒருவர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. ஆனால் அரசியல் நிலைப்பாடு காரணமாக சிங்கமுத்துவுக்கும் வடிவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல பேட்டிகளில் பொது மேடைகளில் சிங்கமுத்து வடிவேலு குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்து பேசி உள்ளார். சமீபத்திய அவரது பேட்டிகளிலும் கூட வடிவேலுவின் திரை வாழ்க்கை மற்றும் அவரது சொந்த வாழ்க்கை குறித்து விமர்சித்து பேசியிருந்தார் சிங்கமுத்து.
இதனைத் தொடர்ந்து வடிவேலு தரப்பிலிருந்து இப்படி சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை பொதுவெளியில் பேசி தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாகவும் பேசுவதற்கு தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மான நஷ்ட ஈடாக தனக்கு சிங்கமுத்து 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பதில் அளிக்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.




