மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‛கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை படத்திற்கு படம் புதுப்புது காம்பினேஷன்களில் நட்சத்திர பட்டாளங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வார். அந்த வகையில் இந்த படத்தில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடிக்கிறார். அதுமட்டுமல்ல நடிகை ஷோபனாவும் நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது கன்னட நடிகர் உபேந்திராவும் கூலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் ரஜினிகாந்த் உடன் தான் இணைந்து நடிக்கும் விஷயத்தை ஆர்வம் மிகுதியால் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளார் நடிகர் உபேந்திரா.
அதே சமயம் இந்த பதிவை சில நிமிடங்களிலேயே அவர் நீக்கியும் விட்டார். ஆனாலும் அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. கன்னடத்தில் பிரபல இயக்குனர், நடிகர் என பவனி வரும் உபேந்திரா கடந்த 2008ல் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சத்யம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 16 வருடங்கள் கழித்து மீண்டும் கூலி படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.