மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.
விழாவில் ரஜினி பேசியதாவது: கருணாநிதி நுாற்றாண்டை கொண்டாடியது போல் வேறு எந்த தலைவரையும் கொண்டாடியது இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் சிறந்த அறிஞர் கருணாநிதி. போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றிபெற்தே அவர் ஆளுமைக்கு உதாரணம். உலகில் வேறு எந்த தலைவரையும் இப்படி கொண்டாடியது இல்லை.
திமுகவில் மூத்த மாணவர்களை சாமாளித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு 'ஹேட்ஸ் ஆப்'. அமைச்சர் துரைமுருகனை சாமாளிப்பது கடினம் என கருணாநிதியே சொல்லி இருக்கிறார். கருணாநிதியுடன் அரசியல் பேசினால் எச்சரிக்கையாக பேச வேண்டும். கருணாநிதி நினைவிடம் ஒரு தாஜ்மகால். கருணாநிதியின் பேச்சு வீணை போன்றது. பத்திரிகையாளர்களை புன்னகையுடன் எதிர்கொள்வார். கருணாநிதிக்கு வந்த சோதனை வேறு யாருக்காவது வந்தால் காணாமல் போயிருப்பார்கள். எதை பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்பது முக்கியம்.
தேர்தல் வெற்றிகள் முதல்வர் ஸ்டாலின் ஆளுமையை காட்டுகிறது. கருணாநிதி மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர் ஸ்டாலின்.
புத்தகத்தின் விலை ரூ.1000 என்பது ரொம்ப அதிகம். குறைத்தால் அனைவரும் படிப்பார்கள். இவ்வாறு ரஜினி பேசினார்.