சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.
விழாவில் ரஜினி பேசியதாவது: கருணாநிதி நுாற்றாண்டை கொண்டாடியது போல் வேறு எந்த தலைவரையும் கொண்டாடியது இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் சிறந்த அறிஞர் கருணாநிதி. போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றிபெற்தே அவர் ஆளுமைக்கு உதாரணம். உலகில் வேறு எந்த தலைவரையும் இப்படி கொண்டாடியது இல்லை.
திமுகவில் மூத்த மாணவர்களை சாமாளித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு 'ஹேட்ஸ் ஆப்'. அமைச்சர் துரைமுருகனை சாமாளிப்பது கடினம் என கருணாநிதியே சொல்லி இருக்கிறார். கருணாநிதியுடன் அரசியல் பேசினால் எச்சரிக்கையாக பேச வேண்டும். கருணாநிதி நினைவிடம் ஒரு தாஜ்மகால். கருணாநிதியின் பேச்சு வீணை போன்றது. பத்திரிகையாளர்களை புன்னகையுடன் எதிர்கொள்வார். கருணாநிதிக்கு வந்த சோதனை வேறு யாருக்காவது வந்தால் காணாமல் போயிருப்பார்கள். எதை பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்பது முக்கியம்.
தேர்தல் வெற்றிகள் முதல்வர் ஸ்டாலின் ஆளுமையை காட்டுகிறது. கருணாநிதி மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர் ஸ்டாலின்.
புத்தகத்தின் விலை ரூ.1000 என்பது ரொம்ப அதிகம். குறைத்தால் அனைவரும் படிப்பார்கள். இவ்வாறு ரஜினி பேசினார்.




