நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. முக்கிய குற்றவாளிகள் பலரும் கைதாகி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய ரவுடி சாம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு போனில் மோனிஷா பேசியதாகவும், அவருக்கு அடைக்கலம் தந்ததாகவும் கூறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொட்டை கிருஷ்ணன் வக்கீல் என்பதால் தங்கள் வழக்கு தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசியதாக மோனிஷா தெரிவித்துள்ளாராம். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக இயக்குனர் நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.