அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. முக்கிய குற்றவாளிகள் பலரும் கைதாகி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய ரவுடி சாம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு போனில் மோனிஷா பேசியதாகவும், அவருக்கு அடைக்கலம் தந்ததாகவும் கூறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொட்டை கிருஷ்ணன் வக்கீல் என்பதால் தங்கள் வழக்கு தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசியதாக மோனிஷா தெரிவித்துள்ளாராம். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக இயக்குனர் நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.