காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், தியேட்டர் அதிபர் சங்கம் அடங்கிய கூட்டுகுழு கூட்டத்தில் அதிரடியாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக நடிகர்கள் விஷால், தனுஷ் ஆகியோருக்கு கட்டுப்பாடு விதிப்பது மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 4ம் தேதி கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைவர் நாசர் தலைமையில் கூடும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இதில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷ் மீது விதித்துள்ள தடை மற்றும் கூட்டுகுழு கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து விவாதித்து அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள்.