சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கி உள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். விஜய் கட்சி சார்பில் போட்டியிட அவரிடம் சீட் கேட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: விஜய் புகழின் உச்சியில் இருக்கும்போதே இனிமேல் நடிக்க வேண்டாம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வருவது ரொம்ப பெரிய விஷயம். இப்படி எத்தனை பேர் செய்வார்கள். அரசியலிலும் அவர் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
அவர் கட்சியை அறிவித்தபோது அவரை படப்பிடிப்பில் சென்று சந்தித்தேன். அவருக்கு வாழ்த்து சொன்னேன். கட்சி தொடங்கும் அறிக்கை வெளியிட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டேன். கடைசி படம் என்று குறிப்பிடும்போது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் கட்சி தொடங்குவதால் மகிழ்ச்சியாக இருந்ததாக சொன்னார். கட்சி பெயர் நன்றாக இருக்கிறது என்று கூறி தேர்லில் போட்டியிட எனக்கு ஒரு சீட் கொடுங்க என்று சொல்லி விட்டு வந்தேன். என்று கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.




