மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சாவர்க்கர் மதிப்பு மிகுந்த மனிதர். தனது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். அந்தக் காலத்தில் பெண்கள் படிக்கமாட்டார்கள் என்பதால் அவரை பலரும் கிண்டல் செய்தனர். சாவர்க்கர் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று படிக்க வைக்கச் சென்றார்'' என்று பேசி இருந்தார்.
ஆனால் அவர் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளார். அது சாவர்க்கர் அல்ல, ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே என பலரும் சுட்டிக்காட்டி சுதாவை விமர்சித்தனர். அதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தான் தவறான கருத்து கூறியதாக ஒரு பதிவு போட்டு வருத்தம் தெரிவித்துள்ளார் சுதா.
அந்த பதிவில், ‛‛என் தவறுக்கு வருந்துகிறேன். எனது 17வது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.