தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் வீர சாவர்கரும் குறிப்பிடத்தக்கவர். அவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக தயாராகிறது. இதில் வீர சாவர்கராக ரன்தீப் ஹூடா நடிக்கிறார். அவர் வீரசாவர்கர் வேடத்தில் இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அச்சு அசலாக அவர் வீர சாவர்கர் போன்றே இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
இது குறித்து ரன்தீப் கூறுகையில், இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் மிக சிறந்த வீரர் ஒருவருக்கு இது ஒரு சல்யூட். ஒரு உண்மையான புரட்சியாளரின் சவாலை என்னால் எதிர்கொள்ள முடியும் மற்றும் அவரது உண்மையான கதையைச் சொல்ல முடியும் என்று நம்புகிறேன். இவ்வளவு காலமாக மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இந்த படத்தில் சொல்லப்படுகிறது என்று எழுதியுள்ளார்.
இயக்குனர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் கூறியிருப்பதாவது: சாவர்க்கரைப் பற்றி மக்கள் மனதில் வெவ்வேறு பதிப்புகள் இருக்கலாம், ஆனால் ஒரு திரைப்படத் இயக்குனராக, சாவர்க்கரின் எண்ணத்தை நான் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். எனவே, படத்தில் வரும் சாவர்க்கரின் கதாபாத்திரத்திற்கும் அவரின் நிஜ வாழ்க்கைக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அவரை எந்த இந்தியனும் என்றும் மறக்க முடியாது, மறக்க கூடாது என்பதை உறுதி செய்வோம். என்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது.