நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தனுஷ் நடிக்கும் 50வது படமான 'ராயன்' நாளை மறுநாள் ஜூலை 26ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகி உள்ளது. தான் நடிக்கும் 50வது படத்தை தானே இயக்கியுள்ளார் தனுஷ். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
பட வெளியீட்டை முன்னிட்டு நேற்று தங்களது குலதெய்வக் கோவிலுக்குச் சென்று தனுஷ் வழிபாடு நடத்தியுள்ளார். கோயிலில் அமர்ந்து தியான நிலையில் பிரார்த்தனையும் செய்துள்ளார்.
தேனி அடுத்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரம் கிராமத்தில் உள்ள கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோயில் தான் அவர்களது குலதெய்வம். தனுஷின் மகன்கள், அண்ணன் செல்வராகவன், அப்பா இயக்குனர் கஸ்தூரிராஜா, அம்மா, இரண்டு சகோதரிகள் என குடும்பத்தினர் அனைவரும் நேற்று வழிபாடு நடத்தியுள்ளனர்.