அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
வாரிசு நடிகர்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. எல்லா காலத்திலும் உண்டு. அதில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்கள் தோல்வி அடைகிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் தான் பி.யு.சி ராஜா பகதூர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். அவர் காலத்தில் அவருக்கு எதிர் களத்தில் நின்றவர் பி.யு.சின்னப்பா. தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ. அவரது மகன் தான் பி.யு.சி.ராஜா பகதூர்.
திரையுலகின் உச்சியில் இருந்த பி.யு.சின்னப்பா மறைவிற்கு பிறகு அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. அந்த காலகட்டத்தில் நடிக்க வந்தார் பி.யு.சி ராஜா பகதூர். சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த “வாழ வைத்த தெய்வம்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'கோயில் புறா' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நாதஸ்வர வித்வானாக நடித்தார். இதைத் தொடர்ந்து வில்லன் வேடங்களில் வாயில்லாப்பூச்சி, ஒரு குடும்பத்தின் கதை, சிவாஜி நடித்த 'தியாகி' போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பிறகு பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குபிறகு 'கரகாட்டக்காரன்' படத்தில் மட்டன் கடை நடத்துகிறவராக, அதாவது வில்லனாக நடித்தார். அதன்பிறகு சிறிய கேரக்டர்களில் நடித்தார். சிலகாலம் டப்பிங் கலைஞராக பணியாற்றினார்.
பின்னர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் நோயுற்று காலமானார். கடைசிவரை அவர் ஆசைப்பட்டதெல்லாம் ஒரு படத்திலாது ஹீரோவாக நடித்து அது வெற்றி பெற வேண்டும் என்பதே. அது கடைசிவரை நிறைவேறால் போனது.