மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ர கவுடாவை சமூக வலைத்தளங்களில் தொந்தரவு செய்த ரசிகர் ரேணுகாசாமி என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
தர்ஷன், அவரது காதலி பவித்ர கவுடா அந்த வழக்குடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். பெங்களுரூவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தர்ஷன்.
அங்கு அவருக்கு அளிக்கப்படும் உணவுகள் தனக்கு செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும், அதனால் வீட்டு சாப்பாட்டை அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் தினமும் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் கொண்ட தர்ஷனுக்கு சிறையில் விதிகளின்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அசைவ உணவு வழங்கப்படுகிறது.
அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரிக்கும் எனத் தெரிகிறது.