மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சந்திரமுகி-2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது ‛பென்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். மேலும் விரைவில் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தை அவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கதை எழுதும் பணிகள் நடந்து வருகிறது என்று அவ்வபோது கூறி வந்தார் லாரன்ஸ். இந்த நிலையில் சமீபத்தில் காஞ்சனா-4 படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலானபோது அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், காஞ்சனா-4 படம் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது லாரன்ஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறேன். அதோடு காஞ்சனா-4 படத்தின் கதைப் பணிகளும் முடிந்து விட்டது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் காஞ்சனா -4 படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.