ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
சந்திரமுகி-2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது ‛பென்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். மேலும் விரைவில் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தை அவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கதை எழுதும் பணிகள் நடந்து வருகிறது என்று அவ்வபோது கூறி வந்தார் லாரன்ஸ். இந்த நிலையில் சமீபத்தில் காஞ்சனா-4 படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலானபோது அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், காஞ்சனா-4 படம் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது லாரன்ஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறேன். அதோடு காஞ்சனா-4 படத்தின் கதைப் பணிகளும் முடிந்து விட்டது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் காஞ்சனா -4 படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.