பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
இயக்குநர் விவேக் ஆத்ரேயா, டிவிவி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்தியா படம் ‛சூர்யாவின் சனிக்கிழமை'. தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படம் மற்ற மொழிகளிலும் வெளியாகிறது. நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். விவேக் ஆத்ரேயா இயக்குகிறார்.
தற்போது இதன் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கி இருப்பதாகவும், வருகிற ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் புதிய தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை நானியை முரட்டுத்தனமான இளைஞராக சித்தரித்து வந்த படத்தின் போஸ்டர்களில் இருந்து மாறுபட்டு அவர் ஒரு சாதாரண நடுத்தர இளைஞராக சித்தரித்து தற்போது போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.