லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபு நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான முன்கட்ட வேலைகள் கடந்த பல மாதங்களாகவே நடைபெற்று வருகின்றன. படம் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
லேட்டஸ்ட்டாக இப்படத்தின் கதை பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது. ராமாயணக் கதையை பின்னணியாக வைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாம். 'சீதையைத் தேடி இலங்கை சென்ற அனுமான்' என்ற ஒரு வரிதான் இப்படத்தின் மையக் கரு என்கிறார்கள்.
அமெரிக்க காடுகளில் உருவாக உள்ள இப்படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பிருத்விராஜிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 'சலார்' படத்தில் ஏற்கெனவே வில்லனாக நடித்திருந்தார் பிருத்வி. விரைவில் இப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகும் என்று தெரிகிறது.