கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மலையாள நடிகை நித்யா மேனன். 'ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம்” ஆகிய படங்களில் அவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதில் நிலையானதொரு இடத்தைப் பிடித்தவை.
தற்போது விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நித்யாவைக் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். கிராமம், திருவிழா, கூட்டுக்குடும்பம் என நகரும் ஒரு கதையில் நித்யா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் பேசி வருகிறார்கள்.
இயல்பான நடிகர் எனப் பெயரெடுத்த விஜய் சேதுபதி, இயல்பான நடிகை எனப் பெயரெடுத்த நித்யா மேனன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என முயன்று வருகிறார்கள். நித்யா ஓகே சொல்லிவிட்டால் படத்தின் அறிவிப்பு விரைவில் வந்துவிடும்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து மலையாளத்தில் 19(1)(a) என்ற படத்தில் நடித்துள்ளனர்.