பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் |
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட பின் அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் புகழ் வெளிச்சம் கிடைத்து வருகிறது. குறிப்பாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக துடிக்கும் சில இளைஞர்கள் இதை பயன்படுத்தி முன்னேற முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் தற்போது இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார்.
இதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான தர்ஷன், முகேன், பாலாஜி முருகதாஸ், ஆரவ் போன்றவர்களும் சினிமாவில் கதாநாயகர்களாக அடியெடுத்து வைத்தனர். ஆனால் கிடைத்த வாய்ப்பை அவர்கள் பெரிய அளவில் தக்க வைக்கவில்லை. இதில் ஆரவ் மட்டுமே கலகத்தலைவன் படம் மூலமாக வில்லனாக நடித்து பாராட்டு பெற்று, தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 வின்னரான ராஜூ ஜெயமோகன் தற்போது பன் பட்டர் ஜாம் என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை இயக்குனர் ராகவ் மிர்தத் என்பவர் இயக்குகிறார். இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறதாம்.
குறிப்பாக நாகேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்த எதிர்நீச்சல் படங்களின் பாணியில் இந்த படம் இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ராகவ். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் கவினுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராஜூ ஜெயமோகன். தற்போது கிடைத்துள்ள இந்தவாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.