'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல், தீபிகா படுகோனே நடித்துள்ள பிரமாண்ட சயின்ஸ் பிக் ஷன் படம் ‛கல்கி 2898 ஏடி'. மகாபாரதத்தை தழுவி இன்றைய காலக்கட்டத்துடன் இணைந்து இந்தபடம் எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 27ல் படம் வெளியாகும் நிலையில் மும்பையில் இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் பேசிய கமல், ‛‛ஹீரோவை விட வில்லனாக நடிக்கவே எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. ஹீரோயினுக்காக ஹீரோ காத்திருந்து காதல் பாட்டு எல்லாம் பாட வேண்டும். ஆனால் வில்லன் அப்படியில்லை தனக்கு பிடித்ததை செய்வான் கல்கியில் அதைத்தான் நான் மகிழ்ச்சியாக செய்திருக்கிறேன். சாதாரண மனிதர்கள் அசாதாரணமான செயல்களை செய்வார்கள். எனது குருநாதர் கே.பாலசந்தர் பார்க்க அரசு அதிகாரி போன்று இருப்பார். ஆனால் அவர் அற்புதமான படங்களை இயக்கினார். அதேப்போல் இயக்குனர் நாக் அஸ்வினும் அசாதாரணமானவர் தான், பாராட்டுக்குரியவர்'' என்றார்.