அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அவர் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. அவ்வப்போது தன்னை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள சுற்றுலா செல்லும் சமந்தா இப்போது கோவை, ஈஷா மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தியானம் செய்வது உள்ளிட்ட சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
அதன் உடன், ‛‛நம்மில் பலர் குரு அல்லது வழிகாட்டியை தேடுகிறோம். உங்கள் வாழ்வை ஒளிரச் செய்பவர்களை கண்டால் அது பாக்கியம். ஞானம் பெற நீங்கள் தான் இந்த உலகில் அதை தேட வேண்டும். உங்கள் மீது பல விஷயங்கள் திணிக்கப்படுவதால் ஞானத்தை பெறுவது சாதாரணமானது அல்ல, அதற்காக உழைக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார் சமந்தா.