ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி |

நடிகர் விஜய் கடந்தாண்டில் பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளை பாராட்டி பரிசளித்தார். அந்த வகையில் இந்த ஆண்டும் அந்த பாராட்டு விழா நடைபெறப் போகிறது. அதுகுறித்து இன்று விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை தமிழக வெற்றி கழகம் சார்பாக நடிகர் விஜய் பாராட்ட உள்ளார்.
முதல் கட்டமாக 28-6-2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. அதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த மாணவ மாணவிகளை பாராட்டுகிறார்.
அதையடுத்து இரண்டாம் கட்டமாக 3-7-2024 புதன் கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு தங்களது பெற்றோர்களின் முன்னிலையில் சான்றிதழும் ஊக்க தொகையும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.