ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மறைந்த திமுகவின் முன்னாள் தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கருணாநிதியின் வரலாற்று புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டது.
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் படத்தில் நடித்து வரும் நடிகர் ஜீவா அவருடன் சென்று இந்த கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கருணாநிதி பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது, சினிமாவைத் தாண்டி முதல்வராக அவர் செய்ததைப் பார்க்க முடிந்தது. கிட்டதட்ட 40 வருஷம் மக்களுக்காக பணி செய்திருக்கார். அதை ரொம்ப அழகாக இங்கு வைத்துள்ளனர். வெளிநாட்டில் மியூசியம் இருப்பது போல் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. குறிப்பாக ஹாலோகிராமில் கலைஞர் பேசியது சிறப்பாக இருந்தது என்றார்.
கருணாநிதியின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட்டால் அதில் நடிப்பீர்களா? என்ற கேட்டபோது “கண்டிப்பாக நடிப்பேன். அதுவும் கருணாநிதியாககூட நடிப்பேன். காரணம் தெலுங்கில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை படத்தில் நடித்த அனுபவம் இருக்கிறது. கருணாநிதியின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பதைவிட வெப் தொடராக எடுப்பதே சிறந்தது. காரணம் அவரது வாழ்ககையை இரண்டரை மணி நேர சினிமாவுக்குள் சொல்லிவிட முடியாது” என்றார்.