மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
'எப்ஐஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மிஸ்டர் எக்ஸ்'.
இப்படத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “மிஸ்டர் எக்ஸ்' ஆக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாறியது மிகவும் உற்சாகமானது. என்ன வரப் போகிறது என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன்,” என அது குறித்து ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து ஆர்யா அடுத்து 'சார்பட்டா பரம்பரை 2' படத்தில் நடிக்க உள்ளார். 'தங்கலான்' படத்தின் வேலைகள் தாமதம் ஆவதால் பா.ரஞ்சித் அதில் பிஸியாக உள்ளார். அதை முடித்துக் கொடுத்த பின் 'சார்பட்டா பரம்பரை 2' ஆரம்பமாகிவிடும் எனத் தெரிகிறது.