மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். அவர் தன்னுடன் இஞ்சினியரிங் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ராஜவேலு என்பவரை பல ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். ராஜவேலு தற்போது ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்.
தனது காதலரைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரியா அவருடன் அங்கு சுற்றி வந்ததைப் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். “சிட்னி….பிராக்டிக்கலாக எனது இரண்டாவது வீடு. இங்கு வந்த மில்லியன் வருகைகளில் தற்போதுதான் அதை நிறுத்தி கவனித்துள்ளேன். இந்த இடம் எவ்வளவு அழகான, கனிவான மக்கள் உள்ள இடம். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இதயம் நிறைந்த அன்புடனும் நன்றியுடனும் மீண்டும் இந்த நகரத்திற்கு வந்துள்ளேன். எங்கள் விருப்பமான சிறிய இடமான மலேசியன் என்ற இடத்தில் நீண்ட தூரம் நடந்தோம், காபி குடித்தோம், பேசினோம், சிரித்தோம், நகரம் ஒளிர்வதைப் பார்த்தோம், அமைதியில் அமர்ந்தோம், அந்த தருணத்தை எங்களுக்கு வழங்கியதற்காக பிரபஞ்சத்திற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரியாவுக்கு சில வருடங்களில் திருமணம் நடந்தால் இரண்டாவது வீடான சிட்னியில் தான் செட்டில் ஆவார் போலிருக்கிறது.