குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். அவர் தன்னுடன் இஞ்சினியரிங் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ராஜவேலு என்பவரை பல ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். ராஜவேலு தற்போது ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்.
தனது காதலரைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரியா அவருடன் அங்கு சுற்றி வந்ததைப் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். “சிட்னி….பிராக்டிக்கலாக எனது இரண்டாவது வீடு. இங்கு வந்த மில்லியன் வருகைகளில் தற்போதுதான் அதை நிறுத்தி கவனித்துள்ளேன். இந்த இடம் எவ்வளவு அழகான, கனிவான மக்கள் உள்ள இடம். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இதயம் நிறைந்த அன்புடனும் நன்றியுடனும் மீண்டும் இந்த நகரத்திற்கு வந்துள்ளேன். எங்கள் விருப்பமான சிறிய இடமான மலேசியன் என்ற இடத்தில் நீண்ட தூரம் நடந்தோம், காபி குடித்தோம், பேசினோம், சிரித்தோம், நகரம் ஒளிர்வதைப் பார்த்தோம், அமைதியில் அமர்ந்தோம், அந்த தருணத்தை எங்களுக்கு வழங்கியதற்காக பிரபஞ்சத்திற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரியாவுக்கு சில வருடங்களில் திருமணம் நடந்தால் இரண்டாவது வீடான சிட்னியில் தான் செட்டில் ஆவார் போலிருக்கிறது.