கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
“சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா, ரோமியோ” படங்களில் நடித்தவர் மிர்ணாளினி ரவி. பி.இ, இஞ்சினியரிங் முடித்து ஐபிஎம் கம்பெனியில் வேலையில் இருந்தவர். டிக் டாக், டப்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். சினிமா வாய்ப்புகள் வரவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு நடிகையானார்.
அவருடைய அப்பா செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் 35 ஆண்டுகளாக வேலை செய்து ஓய்வு பெற்றது குறித்து பெருமிதத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார். “கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எஞ்சினயரிங் முடித்த பின் அப்பா பெங்களூருவில் உள்ள செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த மாதம் ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் 35 வருடங்களாக வேலை பார்த்தார். எங்களுக்கு சிறந்த வாழ்க்கையையும், ஒவ்வொரு விதத்திலும் உத்வேகம் தந்தவர். வேறு எங்கு இருந்தாலும் எனது அப்பா இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார், நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களது அப்பாவின் மகிழ்ச்சிதான் முக்கியமானது.