ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

“சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா, ரோமியோ” படங்களில் நடித்தவர் மிர்ணாளினி ரவி. பி.இ, இஞ்சினியரிங் முடித்து ஐபிஎம் கம்பெனியில் வேலையில் இருந்தவர். டிக் டாக், டப்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். சினிமா வாய்ப்புகள் வரவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு நடிகையானார்.
அவருடைய அப்பா செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் 35 ஆண்டுகளாக வேலை செய்து ஓய்வு பெற்றது குறித்து பெருமிதத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார். “கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எஞ்சினயரிங் முடித்த பின் அப்பா பெங்களூருவில் உள்ள செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த மாதம் ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் 35 வருடங்களாக வேலை பார்த்தார். எங்களுக்கு சிறந்த வாழ்க்கையையும், ஒவ்வொரு விதத்திலும் உத்வேகம் தந்தவர். வேறு எங்கு இருந்தாலும் எனது அப்பா இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார், நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களது அப்பாவின் மகிழ்ச்சிதான் முக்கியமானது.




