''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
“சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா, ரோமியோ” படங்களில் நடித்தவர் மிர்ணாளினி ரவி. பி.இ, இஞ்சினியரிங் முடித்து ஐபிஎம் கம்பெனியில் வேலையில் இருந்தவர். டிக் டாக், டப்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். சினிமா வாய்ப்புகள் வரவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு நடிகையானார்.
அவருடைய அப்பா செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் 35 ஆண்டுகளாக வேலை செய்து ஓய்வு பெற்றது குறித்து பெருமிதத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார். “கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எஞ்சினயரிங் முடித்த பின் அப்பா பெங்களூருவில் உள்ள செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த மாதம் ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் 35 வருடங்களாக வேலை பார்த்தார். எங்களுக்கு சிறந்த வாழ்க்கையையும், ஒவ்வொரு விதத்திலும் உத்வேகம் தந்தவர். வேறு எங்கு இருந்தாலும் எனது அப்பா இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார், நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களது அப்பாவின் மகிழ்ச்சிதான் முக்கியமானது.