நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
“சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்ஜிஆர் மகன், கோப்ரா, ரோமியோ” படங்களில் நடித்தவர் மிர்ணாளினி ரவி. பி.இ, இஞ்சினியரிங் முடித்து ஐபிஎம் கம்பெனியில் வேலையில் இருந்தவர். டிக் டாக், டப்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். சினிமா வாய்ப்புகள் வரவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு நடிகையானார்.
அவருடைய அப்பா செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் 35 ஆண்டுகளாக வேலை செய்து ஓய்வு பெற்றது குறித்து பெருமிதத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார். “கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எஞ்சினயரிங் முடித்த பின் அப்பா பெங்களூருவில் உள்ள செயின்ட் கோபேய்ன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த மாதம் ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் 35 வருடங்களாக வேலை பார்த்தார். எங்களுக்கு சிறந்த வாழ்க்கையையும், ஒவ்வொரு விதத்திலும் உத்வேகம் தந்தவர். வேறு எங்கு இருந்தாலும் எனது அப்பா இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார், நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களது அப்பாவின் மகிழ்ச்சிதான் முக்கியமானது.