கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் |

நாச்சியார் படத்தை அடுத்து பாலா இயக்கிய வர்மா என்ற படம் கைவிடப்பட்ட நிலையில், வணங்கான் படத்தை சூர்யா நடிப்பில் தொடங்கினார். பின்னர் கதை விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினால் சூர்யா அப்படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அருண் விஜய் நடித்து வந்தார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வணங்கான் படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருக்கிறார். அதோடு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக இயக்குனர் பாலாவும், அருண் விஜய்யும் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்ட நிலையில், அதே கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட இந்த வணங்கான் புகைப்படமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.