ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நாச்சியார் படத்தை அடுத்து பாலா இயக்கிய வர்மா என்ற படம் கைவிடப்பட்ட நிலையில், வணங்கான் படத்தை சூர்யா நடிப்பில் தொடங்கினார். பின்னர் கதை விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினால் சூர்யா அப்படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அருண் விஜய் நடித்து வந்தார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வணங்கான் படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருக்கிறார். அதோடு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக இயக்குனர் பாலாவும், அருண் விஜய்யும் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்ட நிலையில், அதே கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட இந்த வணங்கான் புகைப்படமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.