ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் |
நாச்சியார் படத்தை அடுத்து பாலா இயக்கிய வர்மா என்ற படம் கைவிடப்பட்ட நிலையில், வணங்கான் படத்தை சூர்யா நடிப்பில் தொடங்கினார். பின்னர் கதை விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினால் சூர்யா அப்படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அருண் விஜய் நடித்து வந்தார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வணங்கான் படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருக்கிறார். அதோடு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக இயக்குனர் பாலாவும், அருண் விஜய்யும் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்ட நிலையில், அதே கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட இந்த வணங்கான் புகைப்படமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.