மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நாச்சியார் படத்தை அடுத்து பாலா இயக்கிய வர்மா என்ற படம் கைவிடப்பட்ட நிலையில், வணங்கான் படத்தை சூர்யா நடிப்பில் தொடங்கினார். பின்னர் கதை விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டினால் சூர்யா அப்படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அருண் விஜய் நடித்து வந்தார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வணங்கான் படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருக்கிறார். அதோடு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக இயக்குனர் பாலாவும், அருண் விஜய்யும் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்ட நிலையில், அதே கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட இந்த வணங்கான் புகைப்படமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.