சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மும்பையைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார் ஸ்ருதிஹாசன். அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவர் தொடர்ந்து அவருடன் தான் எடுத்துக் கொள்ளும் நெருக்கமான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் திடீரென்று சாந்தனுவை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்வதை நிறுத்தினார். இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து ஸ்ருதிஹாசனின் பிறந்த நாளுக்கும் சோசியல் மீடியாவில் சாந்தனு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது அவர்களது பிரேக்அப்பை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிஹாசனிடம் ரசிகர்கள், தற்போது நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்று கேட்டார்கள். அதற்கு ஸ்ருதிஹாசன், நான் சிங்கிள்தான் மிங்கிளாக விரும்பவில்லை. என்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். அதில் சந்தோஷமாக இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார்.