அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
'விடுதலை' படத்தின் மூலம் ஹீரோவாகி விட்ட சூரி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிறது 'கருடன்' படம். இதனை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். சூரியுடன் சசிகுமார், ரேவதி சர்மா, ஷிவதா, சமுத்திரகனி மைம்கோபி உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.
தற்போது படக்குழுவினர் புரமோஷன் டூர் கிளம்பி உள்ளனர். அந்த வகையில் நேற்று கோவை சென்றனர். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த சூரி கூறியதாவது : விடுதலை படத்திற்கு பிறகு ரசிகர்கள் என்னை காமெடியன் என்பதை தாண்டி வேறொருவனாக பார்க்க தொடங்கி விட்டார்கள். இந்த படத்திலும் அப்படித்தான். விடுதலை படத்தில் கஷ்டப்பட்டு நடித்ததை போன்று இந்த படத்திலும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
தற்போது தொடர்ந்து கதை நாயகனாக நடிக்கத்தான் வாய்ப்புகள் வருகிறது. காமெடியன் வாய்ப்புகள் வருவதில்லை. காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும்பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று விடுவேன். ஆனால் நாயகனாக நடிப்பதால் பொறுப்பு கூடி உள்ளது. கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு நிறைய உழைக்கிறேன். சினிமாவில் எந்த இடமும் காலியாக இருக்காது. அந்தந்த இடத்திற்கு ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். சினிமா அந்த இடத்திற்கான ஆளை தேர்வு செய்து விடும். என்றார்.