எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்து அசத்தியவர் ராதிகா. தற்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருவதோடு டிவி சீரியல்களையும் தயாரித்து வருகிறார். தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஒரு மாதமாக மாவட்டம் முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு காலில் அடிபட்டுள்ளதாக தெரிகிறது. காலில் கட்டுடன் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவரை மூத்த நடிகர் சிவகுமார் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். அதோடு, தான் வரைந்த ஓவியங்களையும் ராதிகாவிடம் சிவகுமார் வழங்கி உள்ளார்.
இந்த வீடியோவை ராதிகா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, ‛‛எனக்கு காலில் ஏற்பட்ட அடியால் அதிலிருந்து மீண்டு வருகிறேன். அண்ணன் சிவகுமார் என்னை வந்து பார்த்தது மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் பல நிகழ்வுகளையும், அவர் வரைந்த ஓவியங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டோம்'' என தெரிவித்துள்ளார்.
தோழிகள் நலம் விசாரிப்பு
இதேப்போல் அவர் ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் அவருடன் பீக்கில் இருந்த நாயகிகள் சுஹாசினி, லிஸி பிரியதர்ஷன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் ராதிகாவிடம் நலம் விசாரித்துள்ளனர். அந்த போட்டோக்களை பகிர்ந்து ராதிகா, ‛‛நண்பர்கள் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். 80ஸ் லவ், நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.