இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் |
மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்கிற எம்.எஸ்.எஸ்.பாக்கியம் பற்றி அதிகமாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். திருச்சி அருகே உள்ள மருங்காபுரி ஜமீன் அரண்மணயில் நிர்வாகம் பார்த்த குடும்பத்தை சேர்ந்த பாக்கியம் சினிமாவில் அறிமுகமாகி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆந்திரா, கன்னடம், மலையாளத்திலிருந்து நடிகைகள் வந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து நடிக்க வந்தவர்களில் முக்கியமானவர்.
நாடகங்களில் நடித்து வந்த பாக்கியம், ஜூபிடர் பிலிம்சில் மாத சம்பள நடிகையாக சேர்ந்து அவர் நடித்த படம் 'வித்யாபதி'. 1946ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன், நாயகி தவமணி தேவி. எம்.என்.நம்பியார் ஜோடியாக பாக்கியம் நடித்தார். ராஜகுமாரி, கஞ்சன், மோகினி, வேலைக்காரி, கன்னியின் காதலி, மர்மயோகி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மர்மயோகியின் இந்தி ரீமேக்கிலும் நடித்தார். திரைப்படங்கள், நாடகங்கள் நடித்த காலத்திலும் வானொலி நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.