நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்கிற எம்.எஸ்.எஸ்.பாக்கியம் பற்றி அதிகமாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். திருச்சி அருகே உள்ள மருங்காபுரி ஜமீன் அரண்மணயில் நிர்வாகம் பார்த்த குடும்பத்தை சேர்ந்த பாக்கியம் சினிமாவில் அறிமுகமாகி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆந்திரா, கன்னடம், மலையாளத்திலிருந்து நடிகைகள் வந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து நடிக்க வந்தவர்களில் முக்கியமானவர்.
நாடகங்களில் நடித்து வந்த பாக்கியம், ஜூபிடர் பிலிம்சில் மாத சம்பள நடிகையாக சேர்ந்து அவர் நடித்த படம் 'வித்யாபதி'. 1946ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன், நாயகி தவமணி தேவி. எம்.என்.நம்பியார் ஜோடியாக பாக்கியம் நடித்தார். ராஜகுமாரி, கஞ்சன், மோகினி, வேலைக்காரி, கன்னியின் காதலி, மர்மயோகி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மர்மயோகியின் இந்தி ரீமேக்கிலும் நடித்தார். திரைப்படங்கள், நாடகங்கள் நடித்த காலத்திலும் வானொலி நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.