நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா. தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ‛சுச்சி லீக்ஸ்' விவகாரத்தில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பிரச்னைக்கு பின் சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்தார்.
சில தினங்களுக்கு முன் சுசித்ரா அளித்த ஒரு பேட்டியில், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறி அதிர வைத்தார். மேலும் அவரை பற்றி தாறுமாறான கருத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தியவர் மேலும் பல பிரபலங்களை பற்றியும் தாறுமாறாக விமர்சித்தார்.
இந்நிலையில் சுசித்ராவிற்கு பதில் அளித்துள்ளார் கார்த்திக் குமார் அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ஒருவேளை நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதை வெளியில் சொல்ல தயங்க மாட்டேன். அதை மறைத்து வைத்து மற்றவர்களை கஷ்டப்படுத்த மாட்டேன். செக்ஸ் என்பது தனிப்பட்டவர்களின் விஷயம். சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் நிகழ்ச்சி நடந்தால் அதில் கண்டிப்பாக கலந்து கொள்வேன். அவர்களை நான் ஆதரிப்பதால் நானும் ஓரினச்சேர்க்கையாளன் என்று அர்த்தம் இல்லை. நான் அப்படிப்பட்டவன் என்றால் அதை வெளிப்படையாக சொல்வேன். அதற்காக நான் அசிங்கப்பட மாட்டேன்'' என தெரிவித்துள்ளார்.