தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் | தங்கர் பச்சான் மகன் படத்தில் நடிக்கும் போது வலியை அனுபவித்து அழுதேன்: ஷாலி | எனது கதையைத்தான் திருடி இருக்கிறார்கள் : 'லாபத்தா லேடிஸ்' கதாசிரியர் குற்றச்சாட்டு | சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் |
கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் ‛தக் லைப்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட கமல்ஹாசன், அதையடுத்து தேர்தல் பிரச்சாரங்களில் இறங்கி விட்டதால் அப்படத்தில் கமிட்டாகி இருந்த ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் கால்சீட் பிரச்சினையால் வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து மீண்டும் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தக்லைப் படத்தில் இணைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் அசோக் செல்வன் கமிட்டாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதைவைத்து பார்க்கும் போது தக்லைப் படத்தில் இருந்து வெளியேறிய ஜெயம் ரவி மீண்டும் அப்படத்தில் இணையவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் தக்லைப் படத்தில் கமலுடன் சிம்பு, அரவிந்த்சாமி, அசோக் செல்வன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.