டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் | பிளாஷ்பேக்: அப்பாவின் நண்பருக்காக மேடையில் ஆடிய சிறுவன் கமல் |
கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் மலையாள திரை உலகை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக மாறியவர் வித்யாபாலன். தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் வித்யாபாலன் மலையாளத்தில் அவ்வப்போது வெளியாகி வரவேற்பு பெரும் படங்கள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்று அவர் கடந்த வருடம் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் : தி கோ என்கிற படத்தைப் பற்றியும் அதில் மம்முட்டியின் நடிப்பு பற்றியும் சிலாகித்து கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மம்முட்டி மிகச்சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக காதல் : தி கோர் படத்தில் அவர் ஏற்று நடித்த ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம் என்பதை விட அந்த படத்தை தயாரிக்க முடிவெடுத்த அவரது துணிச்சல் அதைவிட பாராட்டப்பட வேண்டிய விஷயம். அந்த கதாபாத்திரத்தில் மம்முட்டிக்கு பதிலாக இங்கே பாலிவுட்டில் நடிக்கும் அளவிற்கு எந்த நடிகர்களும் இல்லை என்று தான் சொல்வேன் என்று கூறி உள்ளார். மேலும் இது போன்ற படங்களை ரசிக்கும் அளவிற்கு கேரள ரசிகர்களின் இலக்கியத்தன்மை இன்னும் அதிகரித்து இருக்கிறது என்றும் கூறியுள்ளார் வித்யாபாலன்.