இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
விநாயக் வைத்யநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ரோமியோ'. மிகச் சுமாரான வரவேற்பையே இப்படம் பெற்றது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தது.
இந்நிலையில் படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு கடுமையான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி. “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி 'ரோமியோ' போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் அன்பு மக்களே, ரோமியோ ஒரு நல்ல படம், போய் பாருங்க புரியும்… ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில், கமல்ஹாசன், மாதவன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'அன்பே சிவம்' படம் வசூல் ரீதியாக ஓடவில்லை என்றாலும் அந்தப் படம் இப்போதும் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு படத்துடன் 'ரோமியோ' படத்தை விஜய் ஆண்டனி ஒப்பிட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.