மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம் கடந்த 2004ம் ஆண்டு நடந்தது. இவர்களின் 19 வருட வாழ்க்கையில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். மகன்கள் இருவர் வீட்டிலும் வளர்கிறார்கள். இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் வருகிற அக்டோபர் 7ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.