ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கினார் சுந்தர் சி. தற்போது அவர் அரண்மனை நான்காம் பாகத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். சுந்தர் சி முதன்மை வேடத்தில் நடிக்க தமன்னா, ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தை தயாரித்து உள்ள நடிகை குஷ்பு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 2024 ஏப்ரலில் அரண்மனை 4 திரைக்கு வரும் என்று ஒரு போஸ்டருடன் அறிவித்திருக்கிறார்.
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பேஅரண்மனை 4 திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.