சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கினார் சுந்தர் சி. தற்போது அவர் அரண்மனை நான்காம் பாகத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். சுந்தர் சி முதன்மை வேடத்தில் நடிக்க தமன்னா, ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தை தயாரித்து உள்ள நடிகை குஷ்பு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 2024 ஏப்ரலில் அரண்மனை 4 திரைக்கு வரும் என்று ஒரு போஸ்டருடன் அறிவித்திருக்கிறார்.
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பேஅரண்மனை 4 திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.