மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகை நயன்தாரா திருமணம், குழந்தை வாழ்க்கைக்கு பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் தற்போது தமிழில் எல்.ஐ.சி, டெஸ்ட், மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 போன்ற படங்களில் நடிக்கிறார். இதுதவிர யானையை மையமாக வைத்து உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
இது அல்லாமல் புதிய படங்களில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் நயன்தாராவை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். இது ஒரு பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட கதையாம். நயன்தாராவுக்கும் கதையில் திருப்தி ஏற்படவே இப்போது அடுத்தகட்ட வேலைகள் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.