ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா. அந்த வகையில் இந்த வருடம் தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் இணைந்து விஷ்வம்பரா என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். வசிஷ்டா என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி இசையமைக்கிறார்.
சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த த்ரிஷா, ஒருநாள் காலைப்பொழுதில் நாயகன் சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் மரகதமணி இருவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “உண்மையிலேயே ஜாம்பவான்களுடன் ஒரு தெய்வீக காலைப்பொழுது” என்று கூறியுள்ளார்.