மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கலையசரன், சாண்டி, ஆதித்யா, சோபியா, ஜனனி, கவுரி கிஷன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹாட் ஸ்பாட்'. இப்படத்தின் தலைப்பே இரட்டை அர்த்தம் உள்ள ஒரு தலைப்புதான்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. அதில் பல கெட்ட வார்த்தைகள், ஆபாசமான வசனங்கள், காட்சிகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. யு டியூபில் வெளியாகும் வீடியோக்களுக்கு, டிரைலர்களுக்கு சென்சார் தேவையில்லை. அதனால், சினிமா டிரைலர்கள் சிலவற்றை பரபரப்பு ஏற்படுத்துவதற்காகவே கெட்ட வார்த்தைகள், ஆபாசக் காட்சிகள் ஆகியவற்றுடன் உருவாக்கி ரசிகர்களின் வரவேற்பைப் பெற முயற்சிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் சென்சார் ஆகாத, அந்த டிரைலரை திரையிட்டுள்ளார்கள். இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் பத்திரிகையாளர் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்புதானே எனக் காரணம் சொன்னார். இதனால் சலசலப்பு எழுந்து சர்ச்சையில் முடிந்தது.
சமீபத்தில் கூட 'பைரி' என்ற படத்தை சென்சார் செய்வதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்களுக்காகத் திரையிட்டார்கள். அதில் பல கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. அது குறித்து படக்குழுவினரிடம் கேட்ட போது இந்த பத்திரிகையாளர் காட்சிகளுக்கு சென்சார் தேவையில்லை என்ற அர்த்தத்தில் பேசினார்கள்.
இப்படி சென்சார் ஆகாத படங்கள், டிரைலர்கள் ஆகியவற்றை பத்திரிகையாளர்களக்குத் திரையிட்டால் அதைப் பார்த்துத்தானே அவர்கள் தங்களது விமர்சனங்களையும், செய்திகளையும் வெளியிடுவார்கள்.
இப்படி சென்சார் செய்யப்படாத திரைப்படங்கள், டிரைலர்கள் ஆகியவற்றை பத்திரிகையாளர்களக்கு திரையிடுவது சரியா என்பது குறித்து சென்சார் குழுவினர் உரிய விளக்கம் அளிப்பார்களா ? என்றும் பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.