கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த நான்கு வருடங்களாகத் தயாரிப்பில் உள்ள இப்படம் எப்போது படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என ராம் சரண் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கி வருகிறார் என்பதே இத் தாமதத்திற்குக் காரணம் என்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமை மட்டும்தானாம். ஹிந்தி உரிமையையும் சேர்த்தால் அது 150 கோடியைத் தொடும் என்கிறார்கள். மேலும், படத்தின் சாட்டிலைட் உரிமைகளையும் சேர்த்தால் படத்திற்காகப் போட்ட பட்ஜெட்டை இவற்றிலேயே மீட்டுவிடுவார்களாம்.
தியேட்டர் வியாபாரம், அதற்கான வசூல் மற்றவர்களுக்கான வருமானம். ஓடிடி, சாட்டிலைட்டில் மட்டுமே போட்ட முதலீட்டை 'டேபிள் பிராபிட்' ஆக எடுத்து விடுவதால்தான் இத்தனை வருட தாமதத்திற்கும் தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தப்படவேயில்லை என்கிறார்கள்.