எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
நடிகர் யோகிபாபு ஒரு பக்கம் பெரிய நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராகவும் இன்னொரு பக்கம் நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அப்படி அவர் கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்தவகையில் அவர் தற்போது நடித்து வரும் படம் 'சன்னிதானம் PO'. தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னடத்திலும் உருவாகும் இந்த படம் சபரிமலையை பின்னணியாக கொண்டு உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை அமுதா சாரதி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து கன்னட நடிகரான ரூபேஷ் ஷெட்டி என்பவரும் நடித்து வருகிறார். இதன் மூலம் முதன்முறையாக தமிழிலும் அறிமுகமாகிறார் ரூபேஷ் ஷெட்டி. யோகிபாபுவுடன் நடிப்பது குறித்த தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டுள்ள ரூபேஷ் ஷெட்டி கூறும்போது, “தமிழ் சூப்பர் ஸ்டார் காமெடி நடிகர் யோகிபாபுவுடன் தமிழில் எனது முதல் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றதை பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.