300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
அறிமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‛கா'. இதில் ஆண்ட்ரியா வன உயிர் புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா பேசியதாவது: படத்தின் இயக்குனர் நாஞ்சிலுக்கு எனது பாராட்டுக்கள். உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார். இத்திரைப்படம் குழந்தை மாதிரி. தயாரிப்பாளர் என்ற அப்பாவும், இயக்குநர் என்ற அம்மாவும் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை வளர்த்திருக்க முடியாது.
சில இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு சில நடிகைகளை முதலில் தேர்வு செய்வார்கள். பிறகு அந்த நடிகை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த நடிகைக்கு பதிலாக இன்னொரு நடிகையை நடிக்க வைத்துவிடுவார்கள். ஆனால் நாஞ்சில் அப்படி இல்லை. இந்தப் படத்துக்கு ஆண்ட்ரியாதான் வேண்டும் என்று அடம்பிடித்தார்.
எனக்கு காடு என்றால் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை கோயிலை விட காடு தான் கடவுள், இயற்கை தான் கடவுள். அந்த வகையில் இப்படம் எனக்கு ஸ்பெஷலான படம். இவ்வாறு அவர் பேசினார்.