பிளாஷ்பேக் : படத்தின் வெற்றிக்கு காரணமான சில்க் ஸ்மிதாவின் கோபம் | சிறுவயது தோழி மறைவு : சோகத்தில் ஷோபனா | பென்ஸ் டைட்டில் கேரக்டரில் வில்லனாக நடிக்கும் நிவின்பாலி | பிளாஷ்பேக் : அன்று எம்.ஜி.ஆரை விட அழகான ஹீரோ | லைகாவிற்கு ரூ.21.29 கோடியை வட்டியுடன் செலுத்த விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு | வில்லன் ஆன ஒளிப்பதிவாளர் | ஆண்ட்ரியா பட வழக்கு: தணிக்கை குழுவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு | நிர்வாகிகள் பதவி காலம் நீட்டிப்பு ஏன்? கோர்ட்டில் விஷால் விளக்கம் | ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் |
ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள கார்டியன் என்ற ஹாரர் படம் நாளை(மார்ச் 7) வெளியாகிறது. இதனை 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கிய சபரிகுரு - சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். இயக்குனர் விஜய்சந்தர், தனது பிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சுரேஷ் மேனன், சுமன், தங்கதுரை, குழந்தை நட்சத்திரம் கிருஷி உட்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி ஹன்சிகா கூறும்போது, “அரண்மனை 1, அரண்மனை 2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளேன். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. இதில் பேய் கேரக்டரிலும் நடித்துள்ளேன். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன். பேய் கேரக்டருக்காக, கண்களில் விதவிதமான லென்ஸ் பயன்படுத்தி நடித்தேன். அப்படி நடித்துவிட்டுப் பார்த்தால் அரைமணி நேரம் கண்ணே தெரியாது.
இரண்டாம் பாதியில் சில காட்சிகள் கல்லறை தோட்டத்தில் எடுக்கப்பட்டன. இரவு 12 மணிக்கு மேல் அந்தக் காட்சியை எடுத்தார்கள். அந்தரத்தில் தொங்கி பேயாகக் கத்தியபடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். அது சவாலாக இருந்தது. அந்த நேரத்தில், மேக்கப் போட்ட என் முகத்தைப் பார்க்க எனக்கே பயமாக இருந்தது” என்கிறார் ஹன்சிகா.