தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் |

டைம் டிராவலை மையப்படுத்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இன்று நேற்று நாளை என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.ரவிக்குமார். அந்த படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை இயக்கினார். நீண்ட காத்திருப்புக்கு பிறகு சமீபத்தில் வெளியான அந்த படமும் ஓரளவு வரவேற்பை பெறவே செய்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரவிக்குமார்.
கடந்த 2016ல் பிரியா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரவிக்குமாருக்கு 2018ல் நறுமுகை என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. “எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான்.. உங்கள் அன்பு வாழ்த்துக்களால் வளம் பெறுவான்” என்று தனது விரலை பிடித்துக்கொண்டு இருக்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை பற்றிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரவிக்குமார்.