அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் தொடர்ந்து தாங்கள் மட்டும் இன்றி தங்களது மகன்களின் புகைப்படம், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று தனது இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன் பாலோ செய்திருக்கிறார் நயன்தாரா.
அது மட்டுமின்றி, ‛இது எனக்கு கிடைத்தது என்று அவளது கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்' என்ற ஒரு பதிவையும் போட்டுள்ளார் நயன்தாரா. அவரது புகைப்படத்துடன் கூடிய இந்த வாசகமும் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, ஒருவேளை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரிந்து விட்டார்களோ, அதனால்தான் அவரை அன்பாலோ செய்துள்ளாரோ நயன்தாரா என்று நெட்டிசன்கள் தங்களது யூகங்களை பதிவிட்டு வந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் விக்னேஷ்சிவனை மீண்டும் பாலோ செய்தார் நயன்தாரா. மேலும், அவரது பதிவு, தற்செயலானதா அல்லது தங்களது படத்திற்கான விளம்பர யுக்தியா எனத் தெரியவில்லை.