மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபுவிடம், விஜய் ரசிகர்கள் கோட் படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து நச்சரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விஜய் ரசிகர் கோட் படத்தின் சிங்கிள் எப்போது வரும் என அவரிடத்தில் கேட்டபோது, விரைவில் வெளியாகும் என்று ஒரு பதில் கொடுத்திருந்தார். அதையடுத்து இப்போது அதே ரசிகர், மீண்டும் சீக்கிரம் என்று சொன்னீர்கள், ஒரு வாரம் ஆகியும் இன்னும் சிங்கிள் அப்டேட் வரவில்லையே என்று கேட்டதோடு, ஒரு கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, சொல்லலாம் என்று தான் நினைத்தேன். இப்போ இதுக்கு மேல எப்படி என்று நீங்களே சொல்லுங்க என்று கூறியதோடு, விஜய்னா ப்ளட்ஸ் என்ற ஹேஸ்டேக்கை பதிவு செய்துள்ளார். இதை அடுத்து விஜய்யின் மற்ற ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடத்தில், தங்கள் சார்பில் மன்னிப்பு கேட்டதோடு, இது போன்ற தரம் கெட்ட நபர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி உங்கள் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.